காதல்❤️🌹🦋🦋 (SitaRamam❤️ - 7)
அவளுடன் காதல் மழையில்❤️🌧️ நனைந்து, அவளின் நினைவுகளால் நிறைந்திருந்தேன்.
காதல் நோய் 💖தொற்றிக் கொண்டது.
ஆம் பசி இல்லை, உறக்கம் வரவே இல்லை.
பிணி தீர, மனமுருகி பிராத்தனை செய்தேன் மருந்தீஸ்வரிடம்🙏.
சொல்லிவிட்டால்,
தீராத காதல் நோயும் தீருமென்றார்.
அப்படி செய்தால், என் நோய் அவளிடம் தொற்றிடுமே💕.
பாவம் தான் அவளும்.
சொல்வதற்கு இனிய சொல்லாம் காதல்,
யாரோ சொல்லிச் சென்றது💗.
காதல் நோய் முத்தியதால், முதன் முதலாக திருடிவிட்டேன்,
ஆம், அவள் என் மனதைக் கொள்ளை கொண்டது போல்.
மாயாஜால நிகழ்வில், அவளின் ரோஜா இதழ்கள்🌹, பட்டாம்பூச்சியாய் மாறினவே🦋🦋.. அதை தான்.
எதிரியின் கோட்டைக்குள் புகுந்து கொடி ஏற்றும் எனக்கு,
காதல் கோட்டைக்குள்❤️ போவது, சிரமமானதாய் தோன்றியது.
ஒரு வழியாக,
என் நாட்டியப்பேரொளியைக்
காதல் கோட்டையில் சந்தித்தேன்.
நான் கொண்டு வந்த பட்டாம்பூச்சிகள் அனைத்தும்,
மலரிதழ்கள் மேல் அலங்கரிப்பது போல்,
என் மணவாட்டியைச் சூழ்ந்தது🌹🦋.
அவளும் ரோஜா மலர் போலவே,
செந்நிற சேலையில்❤️🌹.
அவளை அருகில் அழைத்து,
கரம் பற்றி🤝,
கண்ணோடு கண் பார்க்க😍, காதலோடு,
முழுமனதோடு என் திருமண விருப்பத்தை விவரித்தேன்💞.
பாவையின் பார்வையில் ஒருவித பயம், பதற்றம்.. அவளின் சுவாச முறை கூட மாறியது.
அவளின் அருகில் இருந்ததால் உணர்ந்தேன்.
எதற்காகவோ பயந்தவள்,
விடை சொல்லாமல், விடை பெற்றாள்.
புரியாமல் பித்தனானேன்.