மாயக்காரி😍 (SitaRamam ❤️-6)
ஒரு மழை பொழுதில்⛈️🌧️,
என் வினாவிற்கான விடையை விடுவித்தாள்.
"குருஷேத்திரத்தில் ராவண வதம், யுத்த பூமியில் சீதையின் சுயம்வரம்".
அன்று அவளின் உயிரையும், உடமையையும் காத்திருக்கிறேன் ஒரு சராசரி ராணுவ வீரனாய்.
அக்னியின் சாட்சியாய் முதலில் அவள் கரத்தை பற்றியவன் நான் தான், என்ற உண்மையை அவள் சொல்லி அறிந்திட்டேன்.
சும்மாவா சொல்கிறேன் அவளை மாயக்காரி என்று,
உண்மை எனக்கு விளங்கியதும், வெட்கப்பட்டு மாய மான் போல்
ஓடி மறைந்தாள்.
No comments:
Post a Comment