Wednesday, 30 October 2024

அமரன்

அடைமொழி கொண்டு என்னை அழைத்த போது ஆகாயத்தில் பறந்தேன்..
❤️ ஓய் மம்முட்டி❤️
அன்பாய் என்னை அணைத்த போது, அவரிடத்தில் வீழ்ந்தேன்.. 
கடலோரம் காதல் சொல்லி, கடலலைகளில் கரைந்தோம். 
ஆயிரம் வேற்றுமையிலும், ஓர் ஒற்றுமை கண்டோம்.. காதல்❤️
ராணுவ வீரனுக்குக் களத்தில் போராட்டம். 
துணைவிக்கோ அவரை கண்டால் தான் உயிரோட்டம். 
கண்ணயராது காத்திருந்தேன்,
களம் கண்டு, நம் அகம் வருவீர் என.. 
வந்தீர் வீரனாக...அமரனாக
கண்களில் நில்லாமல் நீரோட்டம். 
என் சுருள் குழல் ஒவ்வொன்றிலும், 
நம் சுகமான நினைவுகள் உள்ளன. 
உங்கள் தோள் சாய்ந்து கோதிவிடுகிறேன். 

      - இந்து முகுந்த்




No comments:

Post a Comment