Sunday, 12 May 2024

குஷி

நான் எங்கோ வடக்கே வங்கத்தில்🧭.
அவள் அங்கே, தென்றல் வீசிடும் தெற்கில்.❄️
கைக் குழந்தைகளாய்👶 கரம் பிடிக்க விளைந்து, விலகினோம்👣. 

பின், சுடர் காக்க கரம் சேர்த்தோம்🤝. கண்கள் சந்தித்து, சிரித்தோம்😊. 
விதி எங்களை ஓர் இடத்தில் இணைத்தது,  நட்பாய்🧚. 
ஆனால் விதி யாரை விட்டது.

கருமேகங்களின் இடையில் மிளிரும் நிலவைப் பார்ப்பது போல், 
சிற்றிடை பார்த்தேன். 
சினம் கொண்டு சண்டையிட்டாள்.
அவள் கோவத்திலும் ஒரு குழந்தை சிரித்தது. 
அவள் அக்னி பார்வையில் அன்பு மறைந்திருந்தது. 

ஆனால் கோபத்தை விழியின் விளிம்பில் விதைத்து, 
சிரிப்பை உதட்டின் ஓரத்தில் புதைத்தே நாட்களைக் கடந்தோம்.
காதலின் கனம், கண்களில் மட்டும். 
என் சுவாசத்தை கூட சந்தேகித்திடுவாள். 

பிரிவின் வலி, இதயத்தில் வேராய்🫀
இருந்ததால், 
இருவரும் மனவேலியை, விட்டெறிந்து
எங்கள் காதலை, 
கடிதத்தில் பகிர்ந்தோம். 
ஓர் மனம் திறந்த, 
மௌன உரையாடல்❤️. 
காதல் எழுத்துக்கள், எங்களை
கரம் சேர்த்தது. 
மணநாளில் 🦋 மலர் இதழ்கள் இணைந்தன🌹🦋
                           - SivaJenni🌞


No comments:

Post a Comment