உன் விழியில் விழ,
சூரியன் உதித்து வருவார்🌞.
நண்பகல் நடுவில்,
உன் முகம் பிரகாசிப்பதைக் கண்டு நாணி,
நான்கு திசைகளிலும் தன் கதிர்களை மறைப்பார்🌞☀️.
அந்தி மாலையில், நம் தோட்டத்தில்
நீ நடப்பதால்,
உன் நறுமண ரகசியம் அறிய,
மலர் இதழ்கள் ஓன்று கூடி பேசிடும். ஆகையால் மொட்டாய் மாறிடும்🌹.
இரவில் சில சமயம் உன் முகம் காணாததால், திங்கள் தேய்ந்து போகும். 🌙🌜🌛
ஜாமத்தில் அந்த யாமத்தில்,
நீ துயில் கொள்ளும் அழகை காண வானில் தவமிருக்கும் கோடி நட்சத்திரங்கள். 🌟⭐🌌🌠💫💫💫💫💫
No comments:
Post a Comment