Wednesday, 19 June 2024

திறவாய்

எனை தேடி வந்தாய்,
வாங்கி வந்தாய், 
அறையில் வைத்து அடைத்தாய். 
எனை திறப்பாய், படிப்பாய் என காத்திருக்கிறேன். 
என்னில் எழுத பட்டிருக்கும் வாக்கியங்கள் வலிமையானவை. 
ஆனால் என் எடை, மெல்லிடையே. 
என்னில் எழுத பட்டிருக்கும் வார்த்தைகள், மக்களைப் பேச வைக்கும். 
ஆனால் நான் மௌனித்து இருப்பேன். 
ஓர் நாள் 
திறப்பாய், ரசித்து, வாசித்து மகிழ்வாய்,
பயனடைவாய் என விரும்புகிறேன். 

                       - இப்படிக்கு
                           புத்தகம்         (பூட்டப்பட்டிருக்கும் புத்தகம்)

No comments:

Post a Comment