Thursday, 18 July 2024

மருதாணி🫶 மங்கை🥰

மருதாணி.. மங்கை...
 
பச்சை சேலையில் பளிச்சிடுவாள். 
நான் பக்கம் வர முறைத்திடுவாள்(மருதாணி முள்) 
கைகள் கோர்க்க சிவந்திடுவாள்☺️
அவள் சிவந்திட, நானும் சிலிர்ந்திடுவேன். (மருதாணியின் குளிர்ச்சி) 
என் ஆயுள் ரேகையின் நீளம், 
அவள் உதட்டின் புன்னகை தூரம். 
காலப்போக்கில் சற்று மறைந்தாலும், எங்கள் காதல் என்றும் குறையாதே. 
நிறம் சற்று குறைந்தாலும், 
அவள் நினைவு என்றும் நிலைத்திடுமே. 
ஆயுள் முழுவதும் அவள் கரம் கோர்ப்பேன், 
அவள் புன்னகையை(சிவந்த நிறம்) என்றும் ரசித்திடுவேன். 
☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️☺️
நிறம் மாறும், நிலை மாறும் 
மருதாணியும் மங்கையும் 
ஒன்றன்றோ, 
பச்சிளம் குழந்தையாய் தாய் வீட்டில், 
பருவ மங்கையாய், பக்குவ நிலையில் மறுவீட்டில்(அரைத்த மருதாணி) . 
அவளினுள் இருக்கும் மற்றொரு நிறம், குணம் வெளிப்படுமே, 
அவள் தாயான பின். (மருதாணி நம் கைச் சேர்ந்த பின்).

No comments:

Post a Comment