அவள் நாணத்தை எனக்கு பரிசளித்து விடுவாள்,
சிறு கண்ணசைவினால்😉.
விரல்கள் கொண்டு, என் விழி வெட்கத்தை மறைந்திடுவேன்.
கள்ளி அவள்,
கள்வனின் காதலி அவள்.
உடன் நடப்பினும், உரசாத கைகள்.
அவள் காந்த கண்களால் , மௌனமாகும் என் மொழிகள்.
மனதை காயம் செய்யாத, அவள் மத்தாப்பு சிரிப்பு.
என்னை தேடும் கண்கள்.
கண்டதும் கண்களில் ஓர் நிறைவு.
சின்ன பெரிய கோபங்கள்.
சிரிப்பால் மறையும் சண்டைகள். இப்படி
அனைத்தையும் அழகாய் பார்க்க கற்றுக் கொடுத்தவள்,
காலப்போக்கில் என் காதலி ஆனாள், நான் அவள் கணவனானேன்💕❤️
No comments:
Post a Comment