எதையும் பற்றி அதிகம் சிந்திக்காமல்🤔,
நித்தமும் அவளுடன் நடந்த சந்திப்புகள்💞,
பேச்சுக்கள்😊,
எனை பூமியில் இறக்கை கட்டி பறக்க விட்டன💗.
இது தான் என்று விளக்கிட முடியாத மகிழ்ச்சி கடலில் மனம்💕.
நான் கரம் பற்ற விழைகையில்,
விலகி சென்றவள்,
ஒரு நொடி பொழுது,
என் கரம் பற்றி🤝, என் பிரபஞ்சத்தை நிறுத்தினாள்☃️.
ஆம் நிறுத்தியே விட்டாள்🌏.
காஷ்மீர் பனியில் கூட உறைந்திடாத தேகம்🏔️,
அவள் கரம் பற்றியதும், குளிர்ந்தது☃️.
நான் நிதானத்திற்கு வர, நேரமானது💖.
No comments:
Post a Comment