Monday, 13 May 2024

திரையிசை நாயகனே🎼🎵🎶

Tune Inspired : Jeevithagaadhakale song
from Varshangalkku Shesham

திரையிசை நாயகனே, நம் வாழ்வில் ஒளி ஒலி நிறைந்திடுமே, 
வானவில் வர்ணங்கள் அனைத்தும் நம் வாழ்வில் கலந்திடுமே.

இசையின் முதல் மொழி ஸ்ருதியும் லயமும் தானே🎼

திரையிசை நாயகனே, நம் வாழ்வில் ஒளி ஒலி நிறைந்திடுமே, 
வானவில் வர்ணங்கள் அனைத்தும் நம் வாழ்வில் கலந்திடுமே.

எதிர்வரும் ஓர் நாளில் சூரிய ஒளி ஒளிரும் சமயம், 
உலகெங்கும் நம் கீர்த்தனம்🎶 ஒலிக்கும் காலம் வருமே

ராகத்தாளங்கள், நாத கீதங்கள்🎶🎵 சேரும் ஓர் பாடல் காலம் காலமாய் வாழும்.
ஸ்வர ஜதில் உயிர் பெறும் பாடல் ஆழமாய் நினைவில் வேரூன்றி இதயத்துடன் இசைத்திடுமே.🎵

திரையிசை நாயகனே, நம் வாழ்வில் ஒளி ஒலி நிறைந்திடுமே, 
வானவில் வர்ணங்கள் அனைத்தும் நம் வாழ்வில் கலந்திடுமே.

பநிசா நிச பரிதா மபநிசா
பநிசா நிச பரிதா மபநிசா 
மாபநிசா மாபநிசா

வேறு எதிலும் கிடைத்திடாத மன அமைதி இசையின் வடிவில் உணர்கிறேன். 
ஏழு ஸ்வரங்கள், 
ஏழேழு ஜென்மங்கள், 
எப்பிறப்பிலும் என் நாத கீதம் இசைதானே. 🎼🎵
என் இசையின் ராகமே, ராகமாலிகா கீதங்களே.🎷🎸 

திரையிசை நாயகனே, நம் வாழ்வில் ஒளி ஒலி நிறைந்திடுமே, 
வானவில் வர்ணங்கள் அனைத்தும் நம் வாழ்வில் கலந்திடுமே.(2)

No comments:

Post a Comment