அவள் மாயாஜாலகாரி ஆயிற்றே🧚
மறைந்திருந்தாள்,
என்னை அவள் நினைவில் மயக்கியவாறே🪄.
மாயக்காரி🧚 போவதாய் சொன்ன
நிகழ்ச்சி பற்றி நாளிதழில் பார்த்தும், பறந்தேன்.
மலர் மங்கையை👸 மேடையில் பார்த்தேன்.
அவளது ரோஜா மலரின் இதழ்கள்🌹 ஒவ்வொன்றும்,
பட்டாம்பூச்சியாய்🦋🦋 உருவெடுத்திருந்தன அந்த மாய கண்ணாடி குவளைக்குள்🔮.
மாயக்காரியின் பெயர் மட்டுமே தெரிந்திருந்த எனக்கு,
இந்த மாலை நேர சந்திப்பின்
மூலம் ..
அழகின் முகவரியும்,
என் நங்கை, நாட்டிய பேரொளி என்பதையும் அறியலானேன்.
அவள் புன்னகை வீசிட, பல சுவாரஸ்யமான பேச்சுக்கள் பகிர்ந்தோம்.
உரிமையுடன், "ஹே சீதா" என்று அழைப்பதற்கான உறவாய் இருக்க
ஆசை கொண்டேன்.❤️
No comments:
Post a Comment