SitaRamam ❤️ - 10
காதல் மனைவியின் கரம் நீங்கி போர் களம் புறப்பட்டேன்.
அவளைப் பிரிகையில், மலை அளவு கனம் என் மனதில்.
அவளின் கண்ணீரில் கஷ்மீர் நதியே நனைந்தது.
நெடுந்தூரம் சீதையே ஓடி வந்து கணையாழியைக் கொடுத்து.. ஈரம் காயும் முன்னே வந்திடுங்கள் என்றாள்.
போரில் வெற்றி என்றாலும்..
காதலில்.....
என் காதல் மனைவியை, மகாராணியாய் பார்க்க விழைந்தேன்.
ஆனால் அவள் மகாராணி தான் என்று அறிந்த அந்த நொடி💔...
எனக்காக.. எங்கள் காதலுக்காக... அனைத்து சுகபோகங்களை விட்டு வந்தவள்.
தன் ராஜ்ஜியத்தை ராஜினாமா செய்தவள்❤️ .
நான், அவள் விரும்பிய ராணுவ வீரன், ராம்.
அவள் என் மேல் கொண்ட அபிமானத்தை ஒருநாளும் அறுத்தெறிய மாட்டேன்.
உயிர் நாட்டுக்காக..
உள்ளம் அவளுக்காக..
எப்பிறவியிலும் சீதாவின் ராமனாக,
இந்திய ராணுவ வீரனாக.
- ராம்✍️
No comments:
Post a Comment