Sunday, 12 May 2024

அன்புள்ள அகிலமே👶

நீயே என்தன் அதிசயம்👶.
உன் புன்னகையில் நான் மலர்கிறேன். 
என் மகிழ்ச்சி, உன் சிரிப்பாலே
பல்கிப் பெருகும். 

உன்னோடு இருக்கையில், 
உலகம் மறக்கிறேன்👶. 
உன் பிஞ்சுக் கை விரல் தீண்ட, 
பிரபஞ்சத்தின் 
கருணை உணர்கிறேன். 

தோளில் தூங்கும் தங்கம் நீ👶. 
புரண்டு எழும் பவளம் நீ. 
தத்தி தவழும் மேகம் நீ. 
அமர்ந்து, விழுந்து எழும் வைரம் நீ. 
நடை பழகும் நந்தவனம் நீ. 

மீண்டும் குழந்தையாகிறேன்
உன்னோடு👶. 
நானும் வளர்கிறேன், 
என் கண்ணோடு. 




No comments:

Post a Comment