உன் புன்னகையில் நான் மலர்கிறேன்.
என் மகிழ்ச்சி, உன் சிரிப்பாலே
பல்கிப் பெருகும்.
உன்னோடு இருக்கையில்,
உலகம் மறக்கிறேன்👶.
உன் பிஞ்சுக் கை விரல் தீண்ட,
பிரபஞ்சத்தின்
கருணை உணர்கிறேன்.
தோளில் தூங்கும் தங்கம் நீ👶.
புரண்டு எழும் பவளம் நீ.
தத்தி தவழும் மேகம் நீ.
அமர்ந்து, விழுந்து எழும் வைரம் நீ.
நடை பழகும் நந்தவனம் நீ.
மீண்டும் குழந்தையாகிறேன்
உன்னோடு👶.
நானும் வளர்கிறேன்,
என் கண்ணோடு.
No comments:
Post a Comment