Wednesday, 15 May 2024

முதல் மழை (spoof lyric)

முதல் மழை - பீமா (spoof lyric)

Vikram
முதல் மழையினில் நனையாதே. 
மூடி வைத்த ஜன்னல் திறவாதே. திறந்தால் குளிர் காற்று அடிக்கும் அருகில் நிற்காதே, 
ஜன்னல் வழியே எட்டிப் பார்க்காதே. இடியுடன் ஓ மின்னலும் தோன்றுமே. 

Trisha:
முதல் மழையினில் நனைவேனே. மூடி வைத்த ஜன்னல் திறப்பேனே. திறந்தால் குளிர் காற்றடிக்கும், அதை ரசிப்பேனே. 
ஜன்னல் வழியே எட்டிப் பார்பேனே. இடியுடன் ஓ மின்னலும் தோன்றுமே. 

Vikram:
தலை வேதனை வரும் என்று தானே நான் கூறினேன். 
ஆனால் சொல் பேச்சு கேளாமலே நனைந்தாய். 

நம் வீட்டினில் இன்று தைல வாசனை. 
நில்லாமல் உன் நாசியில் நீர் வழிவதை உணர்ந்தேன். 

Trisha:
என்னை மீறி வரும் கண்ணீரை, 
கண்களில் அடக்க தானே முயன்றேன். 
அதையும் மீறி வரும் தும்மலை, 
இரு கைகளால் தடுக்க தானே முயன்றேன். 
முடியாமலே சற்று தளிர்ந்தேன். 
உன் தோளில் சாய்ந்தேன். 

ஓர் நாள் தும்மல் வராவிட்டால், 
என் வாழ்வில் அந்த நாள் போல் இன்பநாள் இல்லை. 
ஓர் நாள் தும்மல் வந்தே விட்டால், அந்நாளில் ஒரு வேலையும் ஓடவில்லை. 

Vikram:
மருந்தினால் வரும் மயக்கம் நீங்காமலே அந்நாளில் இருக்கும். 
நீ சொல்பேச்சு கேட்காவிட்டால், மீண்டும் இதுபோல தானே நடக்கும். மீண்டும் இதுபோல தானே நடக்கும். 





No comments:

Post a Comment