அவளின் பிம்பத்தைப் பார்த்து வருந்தினாள்.. எவ்வளவு நரை என்று
நான் : நரை அழகு தான் கண்ணே
அவள் : நரை அழகா?? நான்: பிறை அழகா??!!
அவள் : பிறை அழகு தான்.
பிறை அழகு மட்டும் அல்ல.. சிவனின் தலையில் இருப்பதால் தனி விசேஷம் பற்றிருக்கிறது.
சந்திர தரிசனம் புண்ணியம் என்பர்.
பிறை தெரிவதை வைத்தே பல பண்டிகையும் வரும்.
பிறைக்கு என்ன பிழை😏.. நன்றாக தான் உள்ளது😒.. ஹ்ம்ம்...
நான் : (மனதின் குரலாய்) அழகா என்று தானே கேட்டேன். அதற்கு ஏன் அரை பக்க கட்டுரை??!!..
சரி பெண் தானே. அப்படி தான் பதிலளிப்பாள் என்று எண்ணிக்கொண்டேன்.
நான் : இரவில் பிறை அழகென்றால், உன் கட்டுக்கடங்கா கருநிற கூந்தலில் மலரும் நரையும் அழகு தான்.
அவள்: ஓர் பார்வை🤨
நான் : ஓர் சிரிப்பு 🙂
(மனதின் குரலாய் : எப்படியோ சமாளிச்சிடோம்.. இல்லனா பார்லர் போனும் னு பர்சை பதம் பார்த்து இருப்பா. ஏதோ பேசி இப்ப தப்பிச்சுடேன்)
அவள் : என்ன என்ன சொல்றான் பாருங்க. கம்பி கட்டற கதை எல்லாம் சொல்றான்.
No comments:
Post a Comment