தளர்ந்த வயதில் தலை சாய்க்க தோள் இருந்தால், முதுமை என்பது முகத்தினில் மட்டுமே.. அகத்தில் இல்லை..
வாட்டம் இல்லா வாழ்க்கை வையகத்தில வாழ, சிறிது நாட்டம் வேண்டும் வாழ்வுதனில்
தளர்ந்த வயதில் தலை சாய்க்க தோள் இருந்தால், முதுமை என்பது முகத்தினில் மட்டுமே.. அகத்தில் இல்லை..
வாட்டம் இல்லா வாழ்க்கை வையகத்தில வாழ, சிறிது நாட்டம் வேண்டும் வாழ்வுதனில்
அழகிய இசையின் ஆரம்ப இடம் அதுவே.
இறைவன் அளித்த அற்புத மடம் அதுவே.
நாம் அயர்ந்து, ஆனந்தமாய் நித்திரைக் கொண்ட இடம் அதுவே.
இம்மையில் மீண்டும் செல்லயியலாத சொர்கபுரி அதுவே.
சுமந்தவளுடன் நாம் சுற்றி வலம்வந்த முதல் இடம் அதுவே.
கருவறை
பொங்கும் இன்பம் என்றும் தங்கிட
காலையில் வர்ணஜால ஆடையில்,
புன்னகையோடு பூத்திருக்கும் மலர்களைக் கொண்டு
இறைவனை வணங்கி,..
இனிப்புகள் உண்டு..
இரவில் வானில் கோலமிடும் வாண்டுகள் என இந்நாளில்
மனம் மத்தாப்பு போன்று மகிழ்ந்திடும்!!
அனைவருக்கும் தித்திக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்
நீ அன்பாய் அழைக்கிறாய் என்றெண்ணி அருகில் வர, அழ வைக்கிறாய்.
வேண்டாமென்று விலகிச் செல்கையில்
மீண்டும் வரவழைக்கிராய்..
அன்பை எதிர்நோக்கி வரச் செய்து,
அம்பால் நோகடிக்கிறாய் அனுதினமும்
பல்லாண்டு காத்திருந்து பகல்நிலவைப் பார்த்தேன்!
சோலை கொடிமுல்லை போல் நீலவண்ண சேலையில்!!
வாய் பேசிட, வாய்ப்பு கிடைத்தும் வார்த்தைகள் வளரவில்லை!!
இதயம் பந்தயத்தில் ஓடுவது போல் துடித்தது!
பேறுகாலமே என்னுள் நடந்தது ,
'பிடித்திருக்கிறதா' என்ற வார்த்தை
வெளியே வராமல்!!!
அனைத்தையும் அறிந்தவளாய்
நாணப் புன்னகையால் என்னை பிரசவித்தாள்!!
காலம் கடந்த காத்திருப்பும் கசக்கத்தான் செய்யும்
பார்த்திருக்கும் கண்கள் கலங்கத்தான் செய்யும்
எதிர் பார்த்திருக்கும் இதயம் வெம்பி
அழத்தான் செய்யும்
இவை ஏதும் இல்லாக் காதல் புவியில் உண்டோ?
பூக்கள் புத்துயிர் பெற்று புது பிறவி எடுத்திட...
புதுமை எண்ணங்கள் மனதில் புத்துணர்ச்சி அளித்திட..
புதிய நன்னாளில் அனைவரின் மனதிலும் புன்சிரிப்பை பெருகச் செய்திடுவோம்.
நீர் நிறைந்த குட்டைக் கலங்குவதால் , அழகிய ஓவியம் பிறக்கிறது - ஆனால்
நீ நிறைந்திருக்கும் மனம் கலங்கியதால், ஆழ்ந்த காயம் ஏற்பட்டது.
Felt the feeling of moon being alone at night, when asterism engage the sky,
You are alone there, like me on earth.