Friday, 23 December 2016

வாழ்க்கைச் சிறப்புற

தளர்ந்த வயதில் தலை சாய்க்க தோள் இருந்தால், முதுமை என்பது முகத்தினில் மட்டுமே.. அகத்தில் இல்லை..

வாட்டம் இல்லா வாழ்க்கை வையகத்தில வாழ, சிறிது நாட்டம் வேண்டும் வாழ்வுதனில்

Thursday, 3 November 2016

யாருக்குச் சொந்தம்

 தூரப் பார்வையில் தேவதையாய்  தெரிந்தாள் ,
 நெருங்கி வர...என் விழிகளுக்குள் பனிப்போர் மூண்டது. 
அவளின் பிரதிபலிப்பு முழுவதும் தனக்கே சொந்தம் என 
 என் இருக்கண்கள் போரிட்டன ,
போரினால் துடித்ததது என் கண்கள் மட்டும் அல்ல ,
 இதயமும் தான்..



Wednesday, 2 November 2016

வலியின் பரிமாணங்கள்


        கவிதையானது
        எந்தன் வலிகள்
        நாவலானது
        நம் நினைவுகள்
        காவியமானது
        காலத்தால் கரைந்த நம் காதல்
        இவை அனைத்துக்கும் உயிர் 
        கொடுத்த உனக்கே இதைச் சமர்ப்பிக்கிறேன் .

Tuesday, 1 November 2016

கருவறை

அழகிய இசையின் ஆரம்ப இடம் அதுவே.
இறைவன் அளித்த அற்புத மடம் அதுவே.
நாம் அயர்ந்து, ஆனந்தமாய் நித்திரைக் கொண்ட இடம் அதுவே.
இம்மையில் மீண்டும் செல்லயியலாத சொர்கபுரி அதுவே.
சுமந்தவளுடன் நாம் சுற்றி வலம்வந்த முதல் இடம் அதுவே.
கருவறை

Friday, 28 October 2016

தீபாவளி

பொங்கும் இன்பம் என்றும் தங்கிட
காலையில் வர்ணஜால ஆடையில்,
புன்னகையோடு பூத்திருக்கும் மலர்களைக் கொண்டு
இறைவனை வணங்கி,..
இனிப்புகள் உண்டு..
இரவில் வானில் கோலமிடும் வாண்டுகள் என இந்நாளில்
மனம் மத்தாப்பு போன்று மகிழ்ந்திடும்!!
அனைவருக்கும் தித்திக்கும் தீபத்திருநாள் வாழ்த்துக்கள்

Thursday, 27 October 2016

எதிர்பார்ப்பு

நீ அன்பாய் அழைக்கிறாய் என்றெண்ணி அருகில் வர, அழ வைக்கிறாய்.
வேண்டாமென்று விலகிச் செல்கையில்
மீண்டும் வரவழைக்கிராய்..
அன்பை எதிர்நோக்கி வரச் செய்து,
அம்பால் நோகடிக்கிறாய் அனுதினமும்

Sunday, 23 October 2016

பெண் பார்க்கும் படலம்

பல்லாண்டு காத்திருந்து பகல்நிலவைப்  பார்த்தேன்!
சோலை கொடிமுல்லை போல் நீலவண்ண சேலையில்!!
வாய் பேசிட, வாய்ப்பு கிடைத்தும் வார்த்தைகள் வளரவில்லை!!
இதயம் பந்தயத்தில் ஓடுவது போல் துடித்தது!
பேறுகாலமே என்னுள் நடந்தது ,
'பிடித்திருக்கிறதா' என்ற வார்த்தை
வெளியே வராமல்!!!
அனைத்தையும் அறிந்தவளாய்
நாணப் புன்னகையால் என்னை பிரசவித்தாள்!!

Tuesday, 18 October 2016

காத்திருப்பு

காலம் கடந்த காத்திருப்பும் கசக்கத்தான் செய்யும்
பார்த்திருக்கும் கண்கள் கலங்கத்தான் செய்யும்
எதிர் பார்த்திருக்கும் இதயம் வெம்பி
அழத்தான் செய்யும்
இவை ஏதும் இல்லாக் காதல் புவியில் உண்டோ?

நன்னாள்

பூக்கள் புத்துயிர் பெற்று புது பிறவி எடுத்திட...
புதுமை எண்ணங்கள் மனதில் புத்துணர்ச்சி அளித்திட..
புதிய நன்னாளில் அனைவரின்  மனதிலும் புன்சிரிப்பை பெருகச் செய்திடுவோம்.

Saturday, 15 October 2016

காயம்

நீர் நிறைந்த குட்டைக் கலங்குவதால் , அழகிய ஓவியம்  பிறக்கிறது - ஆனால்
நீ நிறைந்திருக்கும் மனம் கலங்கியதால், ஆழ்ந்த காயம் ஏற்பட்டது.

Wednesday, 12 October 2016

நானும் நிலவும்

உன் கண்களால் தூவிய 'பிரிய ' மழை
என் மனதை 'அம்பால் 'அலங்கரிக்க ..
நான் மண்ணில் இருந்து ஏவிய  கூழாங்கற்கள் ,
விண்ணில் நட்சதிரங்களாய்  ஜொளிஜொளிக்க ..
மண்ணில் நானும் விண்ணில்  நிலவும் - தனிமையில்..
அன்பை பகிர்ந்து கொண்டோம்





Monday, 10 October 2016

இயற்கைக்கு மாறாய்

புல்லை மிதித்து புதிய வழி உருவாக்கும் மனிதா
உன்னை மிதித்து பிறர் முன்னேறி சென்றால்,
வலிக்கும் வலி  தானே அந்த புல்லுக்கும் !!
இயற்கை   வஞ்சமில்லாமல் வாரி வழங்கிய அழகை அழித்து ,
செயற்கையில் குளிர் காயும் மானிடா !!
இயற்கைக்கு மாற்றாய் நீ எதை வலுப்பெறச்  செய்தாலும் 
அது இயற்கைக்கு மாறாய் அமையுமே அன்றி , மாற்றாய் அல்ல !!
சொர்க்கம் என்றெண்ணி சுவைப்பது எல்லாம் , ஒரு நாள்
உன்னை அமில உலகில் ஆழ்த்திடும் .


மௌனதால் வருடிய மலர்

நீண்ட நெடிய நீல வான பாதையில் ,
நிழல் தரும் மரங்கள் புடை சூழ நகர்ந்திருந்தேன் ,
காற்று மெல்ல மரங்களைத் தழுவி சென்றிட ,
பூக்களால் நான் நிறைந்தேன் .
எத்தனையோ மணம் கொண்ட மலர்கள் என்னை நெருங்கினாலும் ,
என் மனதை மௌனதால் வருடிய மலர் நீயே என் அன்பே!! 

Friday, 7 October 2016

மறவாதே

வந்த பாதை  மறவாதே , வரவழைத்தவரை மறக்காதே
உன்னை போல் இருப்பவரை வரவழைப்பதை நிறுத்தாதே
வானில் இருந்து மண் சேர்ந்த மழை , மீண்டும் வான் அடைவது போல் , செய்ந்நன்றி மறவாது இரு.

காவிரி எழுதும் கவிதை

இயற்கையின் எழிலாய் எழுந்தருளிய என்னை செயற்கையாய் சிறை செய்து சேரும் இடம் தெரியாது செய்த சீமான்களே !!
அணை போட்டு அடக்கிட யான் ஒன்றும் உம் கைப்பாவை அல்லவே
உன் உறவுகளுக்கு என்னை இல்லை என்று சொல்ல நீ யார் !
உலகமே உறவாக நான் எண்ணினால் , உன் நாள் நிமிடங்களில் முடிந்துவிடும் ..




Saturday, 17 September 2016

கருவளையம்



தனிமையில் தூக்கம் துலைத்த நான், நிலவை பார்த்து ஆறுதல் அடைந்தேன் ..
என்னை போலவே நிலவுக்கும் கருவளையம் இருந்ததே அதன் மேனியில் ..

Loneliness

Felt the feeling of moon being alone at night, when asterism engage the sky,
You are alone there, like me on earth.

Monday, 12 September 2016

முகத்திரை

நான்  முகத்திரை  அணிவது ,  என் நிறம்  காக்க அல்ல
என் விழிகளில் வழியும் நீரானது  , பிறர் முகம் பாராமல் இருக்கவே !!


தனிமை தவறில்லை

  வேண்டாம் என்று விலகி செல்வோரிடத்தில் ,
  உன் விழிநீரை வீணடிக்காதே ,
  வேண்டுமென்று உன் நினைவுகளை நசுக்குவோரிடத்தில்
  கருணை காட்டாதே , அவர்கள் தரநினைக்கும்
  தனிமை எனும் தவிப்பை  ஏற்றுநிற்காதே ..
  நீ தனித்து நின்றால் தவறில்லை ..
  பிறர் எண்ணம் உன் மேல் திணிக்க வாழாதே ..




தனிமை தவறில்லை

தனிமை

தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை , தனிமையை பரிசளிக்க..
தடுக்கி விழுந்தால் , தாங்கிட துணை இல்லாமல் வாழ்க்கை துன்புறுத்த , ..
இதையெல்லாம் கண்டு துவண்டு  விடாதே என்று துயர்பட்ட நெஞ்சம் தூக்கியமர்த்த ..
அகவை அடைந்து இரண்டு தசகாப்தம்  முடியும் தருவாயில் முடிவென்பது நெருங்காதா  என ,
நொறுங்கி போன இதயம் கூக்குரலிட்டது ..


நோட்:

அகவை- 60 Years
தசகாப்தம்- 10 Years

தனிமை

Friday, 9 September 2016

தமிழாய் பிறப்பெடுக்க ஆசை

கவிதை கண்களால் எனை சாய்த்த செந்தமிழ் நாயகியே
உன் கைகளால் வரையும் ஓவியத்தை ரசிக்க ஆவல் கொண்டேன் 
மொழி அறியா நான் , மொழிமாற்றம் கண்டேன் 
உன் தமிழின் நடையில் , நெகிழ்ந்து போனேன் .
உன் விரல் கொண்டு வரைவாயினின் ..
உன் விழி கண்டு வாழ்வேன்னெனின் ..
உன் செவ்விதழ்களால் பாராயணம் செய்வாயினின் ..
இனி வரும் ஐந்தாறு பிறவிதனிலும் ..
தமிழாய் பிறப்பெடுக்க ஆசை .






Friday, 2 September 2016

பெண்மை

மலராய்  மலரும் போது,  நங்கை அவள் அழகு
தென்றலாய் தழுவும் போது ,
    பேதை(1 வயது முதல் 8 வயது ) அவள் இனிமை.
சூறாவளியாய் சுழலும் போது,
     மடந்தை(15 முதல் 18 வயது)  அவள் அருமை
அழகிய அறவாழ்விற்கு ஆதாரம்,
    அரிவையின்(19 முதல் 24 வயது) அறிவே
அகம் அழகுபெற ஆணிவேர் ,
    தெரிவையின்( 25  முதல் 29 வயது) தெளிவே
அற்புத செயலாற்றி, அனுதினமும் அனுபவம் தருபவள்
    பேரிளம் பெண்ணே (30 வயதுக்கு மேல்)

மெழுகின் மேன்மை,  நங்கை இவளிடத்தில் நிறைத்தே இருக்கும் .

பெண்மை

நோட்:
------------
பெண்களின் ஏழு பருவங்கள்

* 1 வயது முதல் 8 வயது வரை – பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்





பெண்ணெனும் பட்டாம்பூச்சி

பருவம் துளிர்க்கும் காலத்தில் பார்ப்பதெல்லாம் பட்டாம்பூச்சியே
வானில் சிறகடிக்கும்  வண்ணத்துப்பூச்சியை வதைக்கவேண்டாம்..
சிறகின் வண்ணம் நோக்குகிறேன் என்று நோகடிக்கவேண்டாம் ..
கையில் பற்றி கசக்கவேண்டாம் ..காயங்கள் வேண்டாம் ..
வண்ணத்துப்பூச்சியின் காயங்கள் வடுவாவதில்லை ..ஆனால் 
பெண்ணின் சிரத்தில் அவை சிறைவைக்கப்படுகின்றன.


Wednesday, 31 August 2016

வெற்றி

மறையும் கதிரவன் விடியும் முன்  வருவதில்லை வெற்றி ,
மனம் சோர்வடையாது முயல்வோருக்கு அமைவது.


பிரிவு

பாராமுகமாய் போகும் பழகிய முகங்களுக்குப் பரிசு, உங்கள் மனதில் பாரமாய் இருக்கும் என் நினைவுகளே ..

எதிரியாய் பிரிவதை விட, நண்பனாய் விலகிடுவது நன்று .


பிரிவு


மென்பொருள் பெண்ணே

மென்பொருள் பெண்ணே , ஒரு மெய் சொல்லவா ,
 உன் கருவிழி ரெண்டும் , கடத்துதே உன்னுலே ...
அரிதினும் அரிது உன்னை அறிய முட்படுவதே , என் அன்பே ..
எனக்கு புரியாத மொழியிலும் , என்னை புலவனாக்கினாய்  நீயே ..
நேரம் மாறும் வேலையிலும் , என் காதல் ஓயவில்லை  ,
விசைதட்டில்( keyboard), என் மனதின் இசை அமைக்கும் , 
என் இசைஞானி நீயே ...
 உன் திசை நாடி, ஈர்ப்பு விசையில் வந்தவன் நானே..
மாற்று சாவி(shift key) நீயாக , 
உன்னை தாங்கும் கட்டு சாவி(control key)நானாக ..
மாற்று விசை(Alt Key) நீதானே ,
 உன் கைக்கோர்க்கும் தத்தல் சாவி (Tab Key) நான்தானே ,
 நாம் இணைந்தே இமைத்திடுவோம்(Alt+Tab) , 
புதிதாய் பிறப்பெடுப்போம்  ..
என் தங்க கட்டி பெண்ணே நீ , சுட்டி(mouse) தொடும் நேரத்தில் , 
என் மனம் கத்தி துள்ளாட்டம் போடுதே ..
நீ மின்திரை(monitor) நோக்கும் நேரம், என் கண் திரை உனை நோக்குதே, உயிர் தோற்குதே  ,
உயிர் பெறவா ? உயிர் தரவா ..? உண்மை சொல் அன்பே நீயே ..



என்ன உலகம் ?

நல்லதே நினைத்தாலும் நடிப்பென்று நகைக்கும் நாடக உலகமடா இது .

என்ன உலகம்

Tuesday, 30 August 2016

உன்னை மெருகேற்று

உன் வினை ஈடேற, எதிர்முனை தன்னில் உபயம் எதிர்நோக்கி காத்திருப்பின் ....ஏமாற்றமே மிஞ்சும் ...
உன் பிழையின் பால் ,அபயம் கொண்டு ..வில் தொடுத்து ,
உன்  வியர்வை தனை விதைத்தால்,  வெற்றி என்பது விருட்சமாய் மலரும்  ..விஜயம் துளிர்க்கும் .

உன்னை மெருகேற்று

Monday, 29 August 2016

எந்தன் வானவில்

தொட்டும் தொடாமல் தொடர்கிற உறவு இது ..
பட்டும் படாமல் படர்கிற காற்றை போல ..

விட்டு விடாமல் , விழி அளவும்  விலகாமல் ,
உன் விரல்கள் கோர்த்து ..
உன்னோடு வாழ்கிற வாழ்க்கை என்றும் வேண்டும் 
என் வர்ணஜால வானவிலே - இந்த வானிற்கு ..

சித்தம் சிறகடிக்கும் நேரத்திலும் ..
என் சிந்தையில் நீயே இருப்பாய் என் ஸ்நிகிதியே ...




எந்தன் வானவில்

காற்றின் அலைவரிசை

காற்றின் அலைவரிசையில் என் காதலியின் கார்குழல் காற்றாடி போல் பறந்து என் மீது தவழும் என்று எண்ணி ,
அவள் அருகினில் வானமாய் விரிந்தேன்.
கண்டுபிடித்தவள் போல் , குழலைக் கட்டி ,
கண்ணாமூச்சி காட்டிவிட்டாள் ..

Kaatrin Alaivarisai


மழை துளியின் காதல்

 என்னை அன்றாடம் கடந்து போகும் மயிலே 🌹
 உன் மேல் பொய்கையாய் பாய்ந்திட நினைத்து
 மழையாய் பொழிந்தேன் ..
 என் எண்ணம் அறிந்தவள் போல ..
 அழகாய் என்னை பார்த்து சிரித்து நின்றாள் ஓரத்தில் .
 நானும் அவளை ஏமாற்றி நின்றேன்.
 துள்ளி வந்தவளிடம் தூறலாய் சேர்ந்தேன் .
 குழலில் முத்து போல் படிந்து , மழையாகிய நான் , அவளின் மணி  மகுடம் ஆனேன்.
 கருவிழியின் நடுவில் விழுந்தென்னைப் பார்த்து கண் அடித்தாள்.
 அவள் என்னை நுகர்ந்திட நுனியில் விழுந்தேன்.
 இறுதியில் ,மோட்சம் பெற எண்ணி அவளின் இதழில் அமர்தேன்,
 என்னை பருகி வாழ்வளித்தாள்.
  Mazhai Thuliyin Kadhal