Sunday, 23 October 2016

பெண் பார்க்கும் படலம்

பல்லாண்டு காத்திருந்து பகல்நிலவைப்  பார்த்தேன்!
சோலை கொடிமுல்லை போல் நீலவண்ண சேலையில்!!
வாய் பேசிட, வாய்ப்பு கிடைத்தும் வார்த்தைகள் வளரவில்லை!!
இதயம் பந்தயத்தில் ஓடுவது போல் துடித்தது!
பேறுகாலமே என்னுள் நடந்தது ,
'பிடித்திருக்கிறதா' என்ற வார்த்தை
வெளியே வராமல்!!!
அனைத்தையும் அறிந்தவளாய்
நாணப் புன்னகையால் என்னை பிரசவித்தாள்!!

No comments:

Post a Comment