கடலின் சீற்றத்தை காணாத கப்பல் உண்டோ
காதலின் கதகதப்பில் கரையாத மனமும் உண்டோ
இன்பமே, அறத்தின் வழியில் அன்பு வசப்படும்
கண்ணில் காதல் குடியேரிவிட்டால், காயங்கள் யாவும் கன நேரத்தில் கண்ணயர்ந்து போகும்.
ஜோடி கிளிகளைத் தாங்கும் தோள்களில், உன் ஜோடி புறாவைச் சேர்ப்பாயோ
காதலைப் போன்று கடவுளும்,
ஓர் உணர்வு தான்,
கண்டவர் யாரும் இல்லை, உணர்ந்தவரும் வெகு சிலரே.
தலை திரும்பினால் தான் குழந்தை உலகை பார்க்கும்.
நீயும் பார்.. அழகிய உலகம் உன் அருகே