SitaRamam ❤️ - 8
என் காதல் தலைவிக்கு தைரியம் சொல்ல, மீண்டும் படை எடுத்தேன் மாளிகைக்கு🏃.
ஒரு கண்ணில் ஏக்கமும், மறு கண்ணில் மிரட்சியும் கண்டேன்🥺.
என்னுடன் அழைத்து செல்ல வந்தேன்,
ஆனால் அன்பிற்கினியாள் அவகாசம் கேட்டதால், அரைமனதுடன் திரும்பினேன்😔.
ஆனால் என்ன ஆச்சரியம்☺️!! , அதிசயம்🤩!! அரைநொடி பொழுதில் என்னுடன் அவள்... தொடரியில்🚈..
மகிழ்ச்சியில் மனம்.💖.
மனையாள் உடன் பயணிக்கையில் மனம் இரட்டிப்பாய் துடித்தது❤️.
அவளுடன் நான்.... 💕
என்னோடு அவள்... 💞
விளைநிலத்தில் விளையாடி,
டென்ட் கொட்டகையில் திரைப்படம் பார்த்து,
மிதிவண்டியில் மிதந்து மகிழ்ந்தோம்.
காரப்பதார்த்தம் உட்கொள்ளாதவள்,
எனக்காக அதை பழகிக்கொண்டாள்.
திருக்கோவில் சென்று தீர்கசுமங்கலி வரம் வாங்கி வந்தாள், என் வாழ்நாள் வரமானவள்.
மீண்டும் சந்திப்போம் என்று சொல்லி சென்றவள், வராததால்..
மீளாத் துயரில் தனியே தவித்தேன்❤️🩹.
கஷ்மீர் குளிரில் என் கண்ணீர் கூட உரைந்தது.. 🥹