Sunday, 30 July 2017

தோனி


  எதிர்நீச்சலிட்டு வானுயர்ந்தாய் ,
பந்தால் விந்தைச் செய்து, எதிரணியினரைப் பந்தாடினாய்..
மட்டையால் பல பட்டங்களை விட்டு,
எதிர்பார்ப்பின்.,ஏகாதிபதி ஆனாய்..
கோப்பைகளைக் குவித்து,
வரலாறு படைத்தாய்.. சகாக்களிடம் சமமாய் இருந்து சகாப்தம் புரிந்தாய்..
நிலைதடுமாறிய வேளையிலும், நிறைவேறிய தருணத்திலும், நிதானமாய் நின்றாய்.. களத்தில்..,.
நிமிர்ந்து நின்றாய்,
எங்கள் நெஞ்சத்தில்...

No comments:

Post a Comment