Saturday, 19 January 2019

மனைவி

என் மனம் சேர்ந்து, மணை வந்த மங்கை.. என் மனைவி.
மாய குரலால் மயக்கிய மனிதி.
சுளீர் சூரியனையும் சிலிர்க்க வைக்கும், என் மிருதுவான மழை சாரல் அவள்.
வெயிலிலும், வசந்த காற்றைச் சுவாசிக்க வைக்கும் வானதேவதை அவள்.
சேயாய் சிரித்திடுவாள், நான் சேயானால்.. மாய மான் போல் மறைந்திடுவாள்.
சேட்டைச் செய்வதில் சிம்டாகாரி, என் இமைகளைச் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் அழகு சிங்காரி...
இறைவியை நேரில் பார்த்ததில்லை..
ஆனால் எனை பண்பட்டவனாக்கவும் , பேணிக்காப்பதிலும் அவளுக்கு நிகர் யாருமில்லை.
என் கோபத்தால் கலங்கிடுவாள்.
அவள் கோபத்தால் என்னை நொறிக்கிடுவாள்.
தவறொன்று செய்தால் அறிந்திடுவாள்.
அன்பால் என்னை ஆட்கொள்வாள்.
மலர் போல மணந்திடுவாள்,
மகரந்தச்சேர்க்கையில் எனை வீழ்த்திடுவாள்.

No comments:

Post a Comment