Sunday, 20 January 2019

மனதின் உளறல்

ஏதும் இல்லா வெற்று உடலில், வாழும் காற்று மட்டுமே அதன் கானம், அதுவே நிரந்தரம்.
எல்லாம் இருந்தும், இல்லா உலகினில், அன்பென்று ஒன்று இல்லை.. அதுவே நிதர்சனம்.
விழிகளை மூடினால், முன் வந்து வழிந்திடுதே வலியின் நீர்.
செவிகளில் சப்தம் நின்றே போனாலும்,
மனதின் சப்தம் கேட்டிடுதே.
கால் போன போகில் போக காலம் வரவில்லை இன்னும்.
மனம் அதன் கீறல்கள்களை பதிவு செய்கிறது.. கைகளின் கிறுக்கள் வாயிலாக .

No comments:

Post a Comment