Friday, 18 January 2019

பன்

என்னவள், மெதுவாய் மைதாவை அள்ளி வீச.. அது பரவலாய் பறந்து வானில் படர்ந்தது மேகமாய் விரிந்தனவோ.. என்னவோ...
நீர் ஊற்றி பிணைகயிலே.. என் நெஞ்சத்தை நணைத்துவிட்டாள்..
அச்சை தேடும் சாக்கில், ஓரே ஒரு பார்வையில்.. என் மனதை எடுத்து பதித்து விட்டாள்
அடுப்பில் அவை இருக்கையிலே..  இருப்பு கொள்ளாமல் தவித்து விட்டேன்..
இறுதியில் என்தன் மனதை அழகாய் செய்து, என் உள்ளங்கையில் கொடுத்து விட்டாள்..
அவளின் மனம் போல்... மணமாய்.
மர்ம புன்னகையுடன் வானை நோக்கினோம்..
எங்கள் மனது ஒளிர்ந்தது... நிலவாய்..

No comments:

Post a Comment