காதல் ரசனை சொட்ட சொட்ட
கதை ஒன்றை கருவாக்கினேன்.
காகிதத்தில் என் கண்ணம்மா..
கண்ணடித்து சிரிக்கின்றாள்.
கண்கொட்டாமல் என் கண்மணியை ரசிக்கிறேன்.
கண்கள் அயர்ந்தாலும்
கனவிலும் கண்ணுக்கினியாளே.
இது காதலி மேல் உள்ள மோகம் அல்ல..
கதையின் மேல் நான் கொண்டத் தீராக் காதல்.
No comments:
Post a Comment