மாலை வேளை
அமைதி கவ்விய சாலை..
காதோரத்தில், காற்றின் பரபரப்பில்
தெற்கு வடக்காய் அலைபாயும் செவிப்பூவும்,
அப்பூவின் அரும்புகளாய்,
பூத்திருக்கும் மணிகளின் ஓசையும்...
மாம்பிஞ்சுக் கொலுசும்,
அதில் விளையாடும்..
முத்துக்களின் ரம்மியமான ஒலியும்..
அமைதி அலங்கரித்த சாலையை..
தன் நுண்ணொலியால் நிரப்பியது
No comments:
Post a Comment