Saturday, 27 May 2017

ரசனை

நடுபகலில் ஞாயிறோடு சண்டையிட்டு வெல்லும் கருமேகக் கூட்டங்களும்,.. மண் வாசனையும்..
பசி அணைக்கும் வேளையில் அமிர்தமாய் கிட்டும் ஒரு பிடி உணவும்..
படி ஏறி, இறங்க குதிக்கால்களில் குதித்தாடும் கொலுசின் ஓசையும்..
சூரியனை ஏமாற்றி இலைகளின் இடுக்கில் மறைந்தாடும் பனித்துளியும்..
இசையின் அதிர்வலைகளில், அழகாய் ஆடும் வீணை நரம்புகளும்..
சொர்க வாழ்வுதனை இம்மையில் உணர வைக்கும் அன்னையின் மடியும்..
இந்த பிறவிதனில் ரசனையோடு ரசிக்க வல்லது.. 😊

No comments:

Post a Comment