மலராய் மலரும் போது, நங்கை அவள் அழகு
தென்றலாய் தழுவும் போது ,
பேதை(1 வயது முதல் 8 வயது ) அவள் இனிமை.
சூறாவளியாய் சுழலும் போது,
மடந்தை(15 முதல் 18 வயது) அவள் அருமை
அழகிய அறவாழ்விற்கு ஆதாரம்,
அரிவையின்(19 முதல் 24 வயது) அறிவே
அகம் அழகுபெற ஆணிவேர் ,
தெரிவையின்( 25 முதல் 29 வயது) தெளிவே
அற்புத செயலாற்றி, அனுதினமும் அனுபவம் தருபவள்
பேரிளம் பெண்ணே (30 வயதுக்கு மேல்)
மெழுகின் மேன்மை, நங்கை இவளிடத்தில் நிறைத்தே இருக்கும் .
பெண்மை
நோட்:
------------
பெண்களின் ஏழு பருவங்கள்
* 1 வயது முதல் 8 வயது வரை – பேதை
* 9 வயது முதல் 10 வயது வரை – பெதும்பை
* 11 வயது முதல் 14 வயது வரை – மங்கை
* 15 வயது முதல் 18 வயது வரை – மடந்தை
* 19 வயது முதல் 24 வயது வரை – அரிவை
* 25 வயது முதல் 29 வயது வரை – தெரிவை
* 30 வயதுக்கு மேல் – பேரிளம் பெண்