Monday, 10 December 2018

கடிந்த காதல்

வெளுத்து போனதே சாயம்
விலகிச் செல்வதே நியாயம்
நொடிந்து போனதே நெஞ்சம்
கடிந்து போனதே காலம்

Saturday, 1 September 2018

Tuesday, 28 August 2018

காணாம‌ல் போன காதல்

நம் நிறைந்த நாட்கள் உன் நினைவில் இல்லையா..
மறக்கும் நிகழ்வுகள் மனதில் நின்றனவா?
மறைக்க ஏதும் இல்லை என்னிடத்தில்..
நீ மறந்து சென்றது என் காதலைத் தான்..
என் மனம் நினைத்து தவிப்பதும் அதைப் பற்றி தான்..

Sunday, 25 February 2018

அன்பின் அரிதாரம்

எதிர் பாரா முத்தங்கள்
அதுவே நான் விரும்பும் சப்தங்கள்.
இரவில், இடம் இருந்தும் இடைவெளி இல்லாமல் இணைந்திருப்போம்.
பகலில் பனிபோல் உன்னுள் படர்ந்திருப்பேன்.
எனை அள்ளி அணைத்து அலங்கரித்து, அன்பால் அரிதாரம் பூசுவாய்.

Saturday, 24 February 2018

காதலே

என் எழுதாக் காகிதங்களில்
ஒளிந்திருக்கும் காவியம் நீ
தெளிந்த வானில் மறைந்திருக்கும் , ஏழுவண்ண வானவில் நீ,
கரும் பலகையில் கண்ணடிக்கும் கலைநயம் நீ
உன்னை உள்ளார்ந்து நேசிக்கும் என் உள்ளத்தை
எப்போது உணர்வாய் நீ

வார இறுதி நாட்கள்

துயில் எழுப்பும் தூய வானம்
திறந்திடா கண்கள்.
தட்டி எழுப்பும் கைகள்,
திரும்பி துயில் கொள்ளச்
செய்யும் தாலாட்டு.
பசி உணர்த்தினாலும்,
பக்கத்து தலையணையைக்
கட்டிக்கொண்டு கனவில் யிக்கும் உள்ளம்.

Thursday, 1 February 2018

நிச்சயம்

எட்டி நின்று, ஏக்கம் கொண்டு கனா கண்ட கண்கள்.. இரண்டும் அருகிலே..
இருநான்கு ஆண்டுகள் நகர்ந்தாலும், மனதினில் நிலைத்திருக்கும், ஆழமான நினைவுகள்..
கரம் பிடிக்கும் காலம் கண் முன்னே..
கண்ணாள.. உன் கண்கள் ஆள நான் வருகிறேன்..
என் நெஞ்சம் நிறைத்திட வாராயோ!!! 😘