Sunday, 4 June 2017

காலம் தாண்டியும்

இறந்தாலும் இருப்பேன் - உயிர்
பிரிந்தாலும் பிறப்பேன்-பாரில்
மறைந்தாலும் மணப்பேன்-உடல்
அழிந்தாலும், வான் அளப்பேன்-இறக்கை
ஒடிந்தாலும் ஒடுங்கமாட்டேன் - எவர்
ஓதினாலும் ஓயமாட்டேன்-கலையில்
கலந்ததால் காலம் தாண்டியும் வாழ்வேன்.

No comments:

Post a Comment