Saturday, 10 June 2017

இதல்லவா வாழ்க்கை

அடித்தெழுப்பும் அலாரம் தேவை இல்லை..
அன்பாய் 'ம்மா' என்று துள்ளி வரும் கன்றின் குரலே போதும்,
காலை பகலவனை நாம் காண..
மிதமிஞ்சி கிட்டும் பால்,
அது பொங்கி வரும் வேளையில் ஓர் நறுமணம்...
அதை வாசம் பிடிக்க, நம் நாசித்துவாரம், தவம் கிடக்கும்..
கஞ்சிக் கொஞ்சம் கிடைத்தாலும், மனமாரப் பருகிச் சென்றோம்..
'மைல்' கணக்கில் இருந்தாலும்..
மணி கணக்கில் நடந்து செல்வோம்.. 😊
சோர்வென்று சொங்கிப் போனதில்லை..
வெயில் என்று வயக்காட்டை விட்டுச் சென்றதில்லை..
விளையாட்டுக்கு முற்று வைத்ததில்லை....
குளிர் காய, குளம் அது போதும்..
இளைப்பாற மரநிழலது போதும்..
சிரித்தாட ஆலமர விழுது போதும்..
வீடுத்திரும்பும் நேரத்தை விட்டில் பூச்சி
நினைவூட்டும்...
வீடைந்ததும் விட்டத்தில் பாயிட்டு, வீசும் காற்று தாலாட்ட கண்கள் அயரும்... அடுத்த நாளை எதிர்நோக்கி.....

No comments:

Post a Comment