Tuesday, 13 June 2017

நிஜம் எது


உண்ண உணவு உண்டு
உடுத்திட உடை உண்டு
உறங்க உறைவிடம் உண்டு
உரையாட உற்றார் உண்டு
உண்மையாய் உழைத்திட வழி உண்டு .
உளமார சிரித்திட,உன்னத உறவுகள் இங்கில்லை
பகிர்வு செய்திட, பிரியமுடைய தோழன் பக்கத்தில் இல்லை,
முகவாட்டத்தை கலைக்க, வாண்டுகள் அருகினில் இல்லை,
நினைப்பதை நிறைவேற்றும்,என் நிலையானவள் நினைவாய் நான் இங்கே..
கோடி கொடுப்பினும், கிடைக்கப் பெறா தாய் மடி அங்கே...
நினைவுகளின் நிழல்கள் கொண்டு, நிஜத்தில் வாழ்கிறேன்..

No comments:

Post a Comment