Monday, 29 August 2016

மழை துளியின் காதல்

 என்னை அன்றாடம் கடந்து போகும் மயிலே 🌹
 உன் மேல் பொய்கையாய் பாய்ந்திட நினைத்து
 மழையாய் பொழிந்தேன் ..
 என் எண்ணம் அறிந்தவள் போல ..
 அழகாய் என்னை பார்த்து சிரித்து நின்றாள் ஓரத்தில் .
 நானும் அவளை ஏமாற்றி நின்றேன்.
 துள்ளி வந்தவளிடம் தூறலாய் சேர்ந்தேன் .
 குழலில் முத்து போல் படிந்து , மழையாகிய நான் , அவளின் மணி  மகுடம் ஆனேன்.
 கருவிழியின் நடுவில் விழுந்தென்னைப் பார்த்து கண் அடித்தாள்.
 அவள் என்னை நுகர்ந்திட நுனியில் விழுந்தேன்.
 இறுதியில் ,மோட்சம் பெற எண்ணி அவளின் இதழில் அமர்தேன்,
 என்னை பருகி வாழ்வளித்தாள்.
  Mazhai Thuliyin Kadhal

6 comments: