Sunday, 14 July 2019

தனிமை

நானும் என் தனிமையும் கைக்கோர்த்து நடந்திடும் நேரம்..
காற்றில் மலர் வாசம் மலர்ந்திடும்..
எண்ணங்களை, வண்ணங்களால் வரைந்திடும் மனது..
மனதின் ஆட்டத்தை அருகில் இருந்து பார்த்திடும் உறவு, தனிமை..
இரவோ, பகலோ பிரிவு இல்லா உறவு..
உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் மனது..
பலருக்கு தனிமையின் தரிசனம் கனாக்காட்சி..
சிலருக்கு என்றும் துணையாய் வரும் மனசாட்சி, தனிமை.
தனிமையிலும் இனிமை காண முடியும்.. மனம்  தனிமையைத் துணையாய் எண்ணி பகிர்ந்து கொண்டால்.

No comments:

Post a Comment