எவ்வாறு நன்றி கூறுவேன்.. என் கன்னத்திற்கு வருகை தந்த உங்களுக்கு
நீங்கள், கணவன் தந்த காயங்கள் அல்ல,
குழந்தை தந்த முத்தங்களும் இல்லை..
இயற்கை தந்த வரங்கள்.. ஆம்
இனிதே தோன்றிய பருக்கள்.
நீங்கள் வந்ததால், இரு கன்னங்களிலும் சந்தனம் பூசப்பட்டது..
ஆனந்த கண்ணீரில் நீங்கள் கரைந்திடா வண்ணம் கண்கலங்கினேன் உணர்ச்சிபூர்வமாக..
ஆம், பெண்ணான நான் மட்டுமே உணர கூடிய உணர்வு இது..
எல்லாம் நன்மைக்கே...
No comments:
Post a Comment