Sunday, 19 May 2019

கல்வி அறிவு

கல்வி கற்பது சரி எது தவறு எது என்று உணரவே..
கற்ற பின்(னாளில்) தான் தெரிகிறது..
கற்றவையில் பிழை உள்ளது என்று..
எனினும்.. பிழையை மாற்ற இயலா பட்ட படிப்பு.. பிழைக்க உதவுகிறது

தேசப்பிதா யார்....??

காலம் காலமாக நமக்கு போதித்தது ஒன்று..
நம் மனம் சொல்வது ஒன்று..

இவ்வாறு பல போர்கள்
மனதிற்கும் மூளைக்கும் இடையே

Saturday, 18 May 2019

பருக்கள்

எவ்வாறு நன்றி கூறுவேன்.. என் கன்னத்திற்கு வருகை தந்த உங்களுக்கு
நீங்கள், கணவன் தந்த காயங்கள் அல்ல,
குழந்தை தந்த முத்தங்களும் இல்லை..
இயற்கை தந்த வரங்கள்.. ஆம்
இனிதே தோன்றிய பருக்கள்.
நீங்கள் வந்ததால், இரு கன்னங்களிலும் சந்தனம் பூசப்பட்டது..
ஆனந்த கண்ணீரில் நீங்கள் கரைந்திடா வண்ணம் கண்கலங்கினேன் உணர்ச்சிபூர்வமாக..
ஆம், பெண்ணான நான் மட்டுமே உணர கூடிய உணர்வு இது..
எல்லாம் நன்மைக்கே...

Tuesday, 14 May 2019

காதல்.. வலி தரும் துணையே

இயற்கையில் இயல்பானதே, என்றாலும் வேண்டாம் என்று விலகினேன்..
இதயத்தில் வலி மிகும் தான்,
என்றாலும்.. இயலாது என்று இடதை இரும்பாக்கினேன்.
வேரூன்றி வளரும் முன்,
வேறு வழியில்லாமல், ஆதி முதலே  தவிர்த்தேன்.
நிறைவேறாது என்று அறிந்ததால் என் அன்பை, அரிந்துவிட்டேன்
பிறர் நலம் கருதி.
அது கூட ஒரு வகை காதலே

மௌனமே என் மொழி

கேட்காது தான்.. ஆனால் பிறர் மனம் சொல்ல நினைப்பதை அவர்களின் விழியின் வழி உணர்கிறேன்..
மௌனம் தான் என் மொழி, இருந்தும் என் மகிழ்ச்சியால் பிறர் மனம் குளிர்விக்கிறேன்.
மனதை நேசிக்க மொழி விதிவிலக்கல்ல..
நேசிக்க முடியாவிட்டால், ஆயிரம் மொழி தெரிந்தாலும், அதில் அர்த்தம் இல்லை

Thursday, 2 May 2019

தலைமை

பெரும் தலைவர் இடத்தில்
பெறும் தலைவர் வேண்டாம்