Since it is deep inside the heart, I believed.
Since I weep inside the heart, no one heard it.
Though I have forgiven a lot,
they don't have the heart to forget that,
Weeping from heart, doesn't make any sense..
Because they wil find hard to listen to my cry.
So I am crying out.
Monday, 29 April 2019
Pain of love
Tuesday, 2 April 2019
அவன் செயல்
எல்லாம் வந்து, தந்து சென்றிடும் வாழ்வில்
நிலைப்பது எதுவோ!!
அன்பும், அறமும் அயர்ந்துறங்கும் அகிலத்தில்
நிலை என்று நினைப்பது எதையோ!!
போகும் பாதை எளிதா இல்லை அடர்ந்த புதரா, என்ற புதிர் தான் புரியவில்லை.
எனினும் எண்ணியது ஈடேற எட்டெடுத்து வைக்கிறேன், எல்லாம் அவன் செயல் என்று.
ரோஜா
ரோஜா வனத்தில் பூத்த ஒற்றை ரோஜா
மென்மை மேலோங்கி இருத்தல் நன்றென நினைத்தாள்- நேசிக்க..
மாசில்லா நறுமணத்தைக் கொண்டு மலர்ந்திருந்தாள் - சுவாசிக்க..
முள் இருந்தும், முதலில் அதை மறந்திருந்தாள்..
பின்னர் மறைத்திருந்தாள், பிறர் நலனுக்காக..
தன் மென்மையே, தன்மேல் விழும் வன்மைக்குக் காரணம் என்றபோது,
வஞ்சித்தவருக்கு வடுவொன்றைப் பரிசளித்தாள்.
பானை வயிறு
இறுதி வரை உடன் வரும் உறவு பெருதெனில்..
நீ பெரிதாய் இருப்பதில் எனக்கு சிறுமை இல்லை வயிறே.
தாய்மை ஒரு தவமெனில்
ஆயுள் முழுவதும் அத்தவமிருக்க விரும்புகிறேன் உன்னுடன்.
பானை வயிறு என்றப் பொருள் பட ,பலரும் பேச.. எனக்கோ, உன்னை குறைத்திடத் தோன்றவில்லை.