Monday, 11 February 2019

நாடக ஒத்திகை

நாடக ஒத்திகை ஒன்று நன்றே அமைந்தது.
மேடையிலும் ஆயிரம் பேர் பார்க்க, தத்ரூபமாக அரங்கேறியது.
நடிப்பின் தடயம் இன்றி வாழ்ந்து காண்பித்தார்கள்,
வாழ்க்கை என்றால் இதுவல்லவா என்று பிறர் எண்ணுவது போல்.
அவற்றை நம்பிய நான்,
இவ்வுலகில் அவர்களுள் ஒருவராக பேராசையுடன் இணைய நினைத்து,..சென்று சேர்ந்த இடமோ பல நம்பியார்கள் வசிக்கும் கூடாரம்.
அங்கே என்னுள் இருக்கும் என்னையும், என் ரசனையையும் துலைத்து..
கல்லடியால்
துளை பட்ட மரம் போல்..
சொல்லடி பட்டு துகள்கள் ஆனேன்.
ஆயினும் ஓயாத அலைகள் போன்று என் மனம் துடித்திருக்க, என் வாழ்வின் துளைகளையே . துணையாய் மாற்றி , இனிய கீதம் பாட வைத்தது, நான் பெரிதும்
நேசித்த என் கனவுகளே..
..

No comments:

Post a Comment