Monday, 25 February 2019

மனமே நலமா

நிலையாய் இருப்பேன் .. உன் நிழலாய் இருப்பேன்.. நன்றாய் இருப்போம்.. நலம் பல காண்போம்..
பேணிக் காப்பேன்.. பெற்றோர் போலவே.. இன்னும் பல வாக்குறுதியை நம்பி வந்த தாரகையை.. தரம் தாழ்த்தி பார்க்க உனக்கு மனம் வந்ததேனோ..

இருந்தும் இல்லை என்ற நிலை தரும் உறவுகளைக் காட்டிலும்.. யாரும் இல்லை என்ற உணர்வு ஒன்றும் செய்வதில்லை..
வாழ்வில் சிலவை சாரலாய் வருவதும், சிலுவையாய் வருவதும்.. அவரவர் செய்த செயல்களே

விழிநீர் வழிந்திடும் போது, துடைத்திட இருப்பேன் என்றாய்.
இப்போது வலிப்பதே உன்னால் தான்.. விழி வழி வரும் நீர் வழிந்திடுவதைத் துடைத்திட விரல் எங்கே தேடுவேன்.

யாரேனும் நலமா என்று கேட்கையில், புன்னகையோடு பூர்ண நலம் என்று சொல்கையில்..
இதயத்தின் குருதி.. எரிமலைக்குழம்பாய் கொதித்து கொல்கிறது...

வலியோடு தானே சிரிக்கிறேன் இன்றும்..
மனம் அதனோடு பழகியதன் மாயம்

Wednesday, 20 February 2019

மாயை


கிடைத்து விட்டால், கிடைத்துவிட்டதல்லவா என்ற எண்ணம்,
கிடைக்காவிடில், விட்டு சென்றதே என்ற ஏக்கம்,
கையில் இருக்கும் பட்சத்தில்,
கண்டுகொள்வது இல்லை.
கிடைத்துவிட்டதைத் தக்க வைத்துக் கொள்ளும் ஆற்றல் இருக்குமாயின்,.. அதுவே உன் மதி. இல்லையேல் விதி என்ற மாயையே!!!!

Saturday, 16 February 2019

தவறு

நான் செய்தச் செயல் ஒன்று தவறாகி போகத்..
தவறேதும் செய்யா என் பெற்றோர்கள் வாடத்..
தகுதியில்லா துணையிடம் தொலைத்தேனே என்னை
தக்கப் பாடம் புகட்டிவிட்டே
மறைவேனே மண்ணில்..

மெய்நிகராக் காதல்

என் உணர்வால் உண்டான உயிரே.. மெய்நிகராக் காதல் குழந்தையே
என் மனதில் மட்டுமே உன்னை சுமக்கிறேன்,
என் கையில் பெறாமலே..

Monday, 11 February 2019

நாடக ஒத்திகை

நாடக ஒத்திகை ஒன்று நன்றே அமைந்தது.
மேடையிலும் ஆயிரம் பேர் பார்க்க, தத்ரூபமாக அரங்கேறியது.
நடிப்பின் தடயம் இன்றி வாழ்ந்து காண்பித்தார்கள்,
வாழ்க்கை என்றால் இதுவல்லவா என்று பிறர் எண்ணுவது போல்.
அவற்றை நம்பிய நான்,
இவ்வுலகில் அவர்களுள் ஒருவராக பேராசையுடன் இணைய நினைத்து,..சென்று சேர்ந்த இடமோ பல நம்பியார்கள் வசிக்கும் கூடாரம்.
அங்கே என்னுள் இருக்கும் என்னையும், என் ரசனையையும் துலைத்து..
கல்லடியால்
துளை பட்ட மரம் போல்..
சொல்லடி பட்டு துகள்கள் ஆனேன்.
ஆயினும் ஓயாத அலைகள் போன்று என் மனம் துடித்திருக்க, என் வாழ்வின் துளைகளையே . துணையாய் மாற்றி , இனிய கீதம் பாட வைத்தது, நான் பெரிதும்
நேசித்த என் கனவுகளே..
..

Saturday, 9 February 2019

Alone yet okay

அன்பென்பது அல்மோஸ்ட் பொய்யடா... 

அலோன் பீ ஹேப்பி என்றும் நானடா..  

நிகழ்ந்தவை எல்லாம் நேர்மறை ஆகும் ஒரு நாள்... 

நடந்தது எல்லாம் என் நட்பலன் நன்மையே.. 

நான் நகர்ந்திட என் காலம் ஒரு துணையே

Tuesday, 5 February 2019

காதலின் பொருள்

காதல்,
இருவர் கை அடக்கமானது.
'பெறும்' சமயம் கண்மூடித்தனமானது.
பொருள் கண்டு வருவதில்லை காதல்.
இருமனம் இணைப்பில் 'பொருள்' சேர்ப்பதே காதல்.
காதல் கடைவீதியில் கிடைப்பதில்லை,
நீ கூறும் பொய்யையும், மெய்யாய் பார்க்கும் முட்டாள்தனம் நிறைந்த மனதில் இருப்பது..

உறவு

இந்த உலகத்தில் தான் , வார்த்தைக்கு மட்டுமே உறவுகளாய் இருப்பவர்களும்..
வாழ்க்கை முழுவதும் உறவுகளாய் இருப்பவர்களும் இருக்கிறார்கள்.

இசைக் கருவி

மீட்டத் தெரிந்தால், பெண்ணும் இசைக் கருவியே..
காலம் முழுவதும் இனிய கானம் மயம்..
மீறி, கை வந்தது போல், கீறினால்..
காலம் முழுவதும் ரண மயம்.