Friday, 22 September 2017

மலர்

உன் அன்பினால், என்னை அதிரச்செய்தாய்..
ஆயுள் முழுவதும் அதை உணரச்செய்வாயோ? ..
சமயங்களில், மெய் மறைத்து, மதி மயக்குகிறாய் ..
பொட்டல் காட்டில், பூந்தோட்டம் இட்டாய்..
மலர், மலர்ந்து மணம் வீசுதே..
மலரின் மண(ன) ம் மாறும் முன்னே, மணந்து கொள்வாயோ!!?

Wednesday, 20 September 2017

கலிகாலம்

வசதியை வைத்து தான் வாழ்க்கைத் துணை அமைகிறது பலருக்கு..
பணத்தை வைத்தால் பரந்தாமனைப் பக்கத்தில்
பார்க்க முடிகிறது..
பலபேருக்கு தெரிந்திருந்தால், அவன் பெரிய ஆள்.. அவன் குற்றவாளி ஆனாலும் கூட..
உச்சரிக்கும் உதடுகளில், உண்மை இருப்பதில்லை..
உள்ளத்தில் இருப்பது, உதட்டில் வருவதில்லை..
இன்னும் பல,..
கலியுகம்

Sunday, 10 September 2017

நீங்காதே

நீ.. நீங்கியதால்
விழிநீர் வற்றி,
நிலம் எல்லாம் குளமாகி போனதே,
கருநிற கறைக் கொண்ட குழல், கறை நீங்கி நரை கண்டதே.
நெஞ்சில் உதிரம் உறைந்து நின்றதே !!!

Monday, 4 September 2017

கண்ணானக் கண்ணே

Convex கண்ணாலே எனை கடத்தி தான் போனாயே
கண்ணோடு கண் பார்க்க சிறிது காலம் தான் தந்தாயே
மைவிழி பார்த்து, மெய் மறந்து போனேனே
Concave போட்டு தேடுகிறேன் எனை, உன்னுள்ளே
காட்டிக்கொடுத்தால், காலம் எல்லாம் கட்டிக்கொள்வேன் உனை என்னுள்ளே
Retina வில் உன் Reflection,
Refresh ஆனது என் நெஞ்சம்
Refraction இல்லாமல் தினந்தோறும் உன் பிம்பம், எனை distract செய்வது என் இன்பம்
Magnetic மலையும் நீ,
மெல்லிய சாரலும் நீயே ..
மேகமாய் எனை சூழ்ந்து மயக்கும் மோகமும் நீயே தீயே💕