உயிர் நட்பென்று வாய் வழி மட்டுமே உரைத்து..
உண்மை அற்ற, உறவாய் வழிநெடுக்க வந்து,
உணர்வுகளை உதாசீனப்படுத்தி, வலி தந்து ..
குற்றமற்ற நட்பை குறைக் கூறி செல்வதற்கு, மனம் வந்தது உனக்கு..
மனம் நொந்தது எனக்கு..
வலியிலும், ஓர் வழி பிறந்தது...
இந்த வாக்கியமாய்.....
- பிரியா கே. ஜி. எம்
Saturday, 29 April 2017
நட்பில் பிரிவு
Thursday, 13 April 2017
செம்மொழி
பிற மொழி பயிலும் முனைப்பில்
தமிழ் மொழி மறவாதே!!!
நொடி பொழுதில் பழமை பெறும்
தொழில்நுட்பம்....!
நெடுங்காலமாய், நிறைவாய்.. நயத்துடன் நிலைத்திருக்கும்
தமிழின் நுட்பம்..!!
அறிவையும், ஆளுமையையும் ஆழமாய் செவ்வனே பதியச் செய்வது எம்மொழி.. (புறநானூறு)
அன்பையும் , பண்பையும் அழகாய் ஆழ்மனத்தில்
விதைக்கவல்லது செம்மொழி..
(அகநானூறு)
பிறமொழியில் தமிழின் ஆதிக்கம் இருக்கும்..
கொஞ்சிடும் தமிழில் இன்பம் என்றும் நிறைந்து இருக்கும்!! 🌹
Saturday, 8 April 2017
பிரியாவிடைப் பரிசு
நினைத்ததை நினைத்தபடி
நித்தம் செய்து
நின் வாழ்க்கையில்
நிமிர்ந்து நின்று
நிலையான பலவற்றைப்
பெற்று, நிம்மதியாய்...
உன் மதியாய், உன்தன்
வாழ்வில் வளம் சேர்த்து..
வலம் வரப்போகும், மதியுடன்
பகலவனாய் பிரகாசிக்க
வாழ்த்துகிறேன்
Subscribe to:
Posts (Atom)