Thursday, 3 November 2016

யாருக்குச் சொந்தம்

 தூரப் பார்வையில் தேவதையாய்  தெரிந்தாள் ,
 நெருங்கி வர...என் விழிகளுக்குள் பனிப்போர் மூண்டது. 
அவளின் பிரதிபலிப்பு முழுவதும் தனக்கே சொந்தம் என 
 என் இருக்கண்கள் போரிட்டன ,
போரினால் துடித்ததது என் கண்கள் மட்டும் அல்ல ,
 இதயமும் தான்..



Wednesday, 2 November 2016

வலியின் பரிமாணங்கள்


        கவிதையானது
        எந்தன் வலிகள்
        நாவலானது
        நம் நினைவுகள்
        காவியமானது
        காலத்தால் கரைந்த நம் காதல்
        இவை அனைத்துக்கும் உயிர் 
        கொடுத்த உனக்கே இதைச் சமர்ப்பிக்கிறேன் .

Tuesday, 1 November 2016

கருவறை

அழகிய இசையின் ஆரம்ப இடம் அதுவே.
இறைவன் அளித்த அற்புத மடம் அதுவே.
நாம் அயர்ந்து, ஆனந்தமாய் நித்திரைக் கொண்ட இடம் அதுவே.
இம்மையில் மீண்டும் செல்லயியலாத சொர்கபுரி அதுவே.
சுமந்தவளுடன் நாம் சுற்றி வலம்வந்த முதல் இடம் அதுவே.
கருவறை