ஓர் பொழுதினில், ஓர் மழையினில், ஓர் தனிமையில், ஓர் குடையினில், சிறு சிறு கதைகளைப் பரிமாறி,
நாம் இருவரும் பல நெடுந்தூரம் மெல்லிய மௌனத்தில் நடந்திட.. உள்ளம் இடம் மாறிட..
நம் சிரிப்பினில் நாம் நனைந்திட..
ஓர் இடியினில் நம் இடைவெளி சுருங்கிட,
நம் விரல்களின் இடைவெளி மறைந்திட,
வாழ்நாள் எல்லாம் இந்த அடை மழை தொடர்ந்திட மனம் இறைவனை வேண்டிடுமே.
உன் முகப்புத்தகத்தில் உள்ள முக வரிகளில், என் காதல் முகவரி இருந்திட.. இதயங்கள் இணைந்திட..
வரம் என வாழ்நாள் எல்லாம் உன்னுடன் நான் இருந்திட வேண்டுமே.
உன் உள்ளத்தில இடம் பிடிக்க ஒரு வழி சொல்லம்மா..
நம் இல்லத்தில, உன் மணம் கமழும்
நாள் வருமா..
பிரியா பிரியா பிரியா பிரியா பிரியா
பிரியா பிரியா பிரியா பிரியா பிரியா