மறக்க நினைத்த நொடி,
என் மனதில் பூத்த மலர்க்கொடி..
கொடி காற்றின் திசையில் ஆடும்.. மனமோ உன்னை தேடி போகும்.. இதுவே இறுதி என்று நினைக்கையில், முளையில் இருந்து வருகிறாய்..
Thursday, 26 January 2017
முதலில் இருந்து
Friday, 20 January 2017
வேர் அறுப்போம்
நாம் வாழ, பிறர் சாக.. இதை எத்தனை ஆண்டுகள் பார்த்திருப்போம்,
கண்டும் காணாதிருந்த முதலைகளை களை எடுப்போம்,
இராண்டாகினும், நான்காண்டாகிணும், அவைகளை வேர் அறுப்போம்,
காளையின் திமிலை மட்டும் அல்ல
பலரின் திமிரையும் அடக்குவான் தமிழன்.
அந்நியரை அனுமதிப்பதும், அவதிபடுவதும், அமைதி காப்பதும், அல்லல் படுவதும் இனி அறவே வேண்டாம்.
தனித்தனியாக வந்தோம்,
ஓர் அணியாய் உருவெடுத்தோம், அரசியல் கட்சிகளை ஆட்டம் காணச் செய்தோம்.
அறத்தினை விதைத்திடுவோம், ஆணிவேர் என்றாகிடுவோம்.. சலசலப்பிற்கு இடமில்லாமல்,
பல சகாப்தம் புரிந்திடுவோம்
Subscribe to:
Posts (Atom)