மஞ்சள் வானம் மலர்ந்திருக்க, மழை மண்ணோடு நேசம் கொள்ளும் மாலை வேளையில்,
கள்ளி என்னருகில், காதலைக் கண்களில் சுமந்து நின்று இருந்தாள்.
கண் பாஷையில் கூறிய காதல்,
அவள் நாவின் நுனியில் நின்று நாட்டியம் ஆடியது அவளை போல,
இதழ் படபடக்க..
அவளின் மனதில் ஆயிரம் கேள்விகள் சிறகடிக்க.. ஆசையை கூறாமலே அவசரமாய் மறைந்தாள்
மூன்றாம் பிறை போல..
பௌர்ணமியை எதிர்நோக்கும் என் காதல் ♥️