தொடத்தொட நகரும்
சின்ன வண்ண மேகமே
நீயே எந்தன் நந்தநந்தனா
என்ன என்ன மாயம்
செய்ய எந்தன் வாழ்வில் வந்தாயோ நீயே என்றும் எந்தன் நந்த நந்தனா
மெலிதாய் எளிதாய் பேசி உள்ளம் கவரும் சகியை
நீயே எந்தன் நந்தனந்தனா
காதலை சொல்லியும் சொல்லாமல் எத்தனை முறை பறந்தாலோ இது போலே.. பட்டாம்பூச்சியாய்..
நீயே எந்தன் நந்தநந்தனா
பார்வைகள் பார்த்தும் பாவை பார்க்காதவள் போல் எத்தனை முறை பார்த்தாலோ..
நீயே எந்தன் நந்தநந்தனா
இதயத்தை இழுத்து செல்கிறாள் வயதை வதைத்துக் கொல்கிறாள் சித்திரமாய் அவளே என்னுள் நிற்கிறாள் நந்தநந்தனா..